tamilnadu

img

இந்தியாவின் ஹிட்லர்கள்தான் மோடியும், அமித்ஷாவும்.. கெஜ்ரிவால் கடும் சாடல்

விசாகப்பட்டினம், ஏப். 2 - பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் இந்தியாவின் ஹிட்லர்கள் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் சாடியுள்ளார். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற தெலுங்குதேசம் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, கெஜ்ரிவால் மேலும் பேசியிருப்பதாவது: “சகோதரத்துவம், வேற்றுமையில் ஒற்றுமை இந்தியாவின் பெருமை வாய்ந்த கொள்கைகளாக இருந்தன.அவற்றுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலைமோடியும், அமித்ஷாவும் ஏற்படுத்தியுள்ளனர். இந்தியாவை மத ரீதியாகப் பிளவுபடுத்துவதற்கு பாகிஸ்தான் கடந்த 70 ஆண்டுகளாக முயற்சித்தும் முடியாததை, பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் கடந்த 5 ஆண்டுகளில் ஈடேற்றி விட்டனர். ஒரு சாதிக்கு எதிராக மற்றொரு சாதியினரைத் தூண்டி விடுகிறார்கள். நாட்டில் அவசர நிலை போன்ற சூழல்நிலவுகிறது. மத்திய அரசின் நிறுவனங்களை ஏவி மக்கள் மீதும், அமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்துகிறார்கள்.சுதந்திரத்துக்குப் பின் நாடு சந்திக் கும் மிகப்பெரிய ஊழல்வாதி என்றால் அவர் மோடிதான். அவரும், அமித் ஷாவும்சேர்ந்து நாட்டை அழித்துவிட்டனர். பாஜக எம்.பி. சாக்சி மகராஜ் அண்மையில் ஒரு கருத்தைக் கூறியிருந்தார். அதில், மோடி மீண்டும் வெற்றிபெற்றால், இந்த மக்களவைத் தேர்தலுக்குப்பின் நாட்டில் தேர்தலே வராது என்று தெரிவித்திருந்தார். ஹிட்லர் அதிகாரத்துக்கு வந்ததும், ஜெர்மனியின் அரசமைப்புச் சட்டத்தை மாற்றி, சாகும் வரை ஆட்சியில் இருந்தார். மோடியும், அமித்ஷாவும் ஹிட்லரைப் போன்றவர்கள் தான். மகராஜ் கூறியதைப் போல், இவர்கள் வென்றால், 2019-ம் ஆண் டுக்குப் பின் தேர்தல் இருக்காது.இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

;